கண்ணுக்கு தெரியாத மை பரிசோதனை (எலுமிச்சை சாறு மற்றும் உப்பு )

எலுமிச்சை சாறு மற்றும் உப்பு பயன்படுத்தி கண்ணுக்கு தெரியாமல் எழுதுவதற்கான மை உருவாக்கும் இந்த எளிதான அறிவியல் பரிசோதனையை முயற்சி செய்துபாருங்கள். இந்த மையை பயன்படுத்தி ரகசிய செய்திகளை எழுதலாம் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காட்டலாம்.

இன்று நாங்கள் உங்களுக்குக் செய்துக் காண்பிக்கப் போகும் பரிசோதனை – உங்கள் கண்ணுக்கு தெரியாத மை எப்படி வீட்டில் செய்யலாம்.

ஆமாம், கண்ணுக்கு தெரியாத மை பயன்படுத்தி, ரகசிய முகவர்கள் செய்வது போன்ற ரகசிய செய்திகளை எழுதலாம்.

இது மிகவும் எளிதானது மற்றும் இதைக் கொண்டு விளையாடுவது மிகவும் வேடிக்கையானது.

கண்ணுக்கு தெரியாத மை செய்வது எப்படி

கண்ணுக்கு தெரியாத மை தயாரிக்க தேவையான பொருட்கள்

கீழே உள்ள பொருட்களை தயார் செய்து கொள்ளுங்கள்.

  • எலுமிச்சை
  • தண்ணீர்
  • பெயிண்ட் பிரஷ்
  • உப்பு
  • மெழுகுவர்த்தி
  • லைட்டர் (அ) தீப்பெட்டி
  • காகிதம்
கண்ணுக்கு தெரியாத மை பரிசோதனைக்கு நமக்குத் தேவையான பொருட்கள்:

மேலே உள்ள பொருட்கள் உங்களிடம் இருந்தால் போதும்.தொடங்கலாமா!

கண்ணுக்கு தெரியாத மை தயாரிப்பதற்கான வழிகள்.

இரண்டு வெவ்வேறு முக்கிய பொருட்களைப் பயன்படுத்தி இரண்டு வெவ்வேறு முறைகளில் வீட்டில் கண்ணுக்கு தெரியாத மை தயாரிக்கப் போகிறோம்.

முறை -1: எலுமிச்சை சாறு கண்ணுக்கு தெரியாத மை பரிசோதனை

1.நன்கு பழுத்த எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு எடுக்கவும்.

2.இப்போது, எலுமிச்சை சாறுடன் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். வெறும் 10-15 சொட்டு நீர் போதும். எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீரை நன்றாக கலக்கவும். That’s it. இப்போது கண்ணுக்கு தெரியாத மை தயாராக உள்ளது.

உங்கள் செய்தியை எலுமிச்சை சாறுடன் எழுதத் தொடங்குங்கள்.

3. காகிதத்தைத் தேர்ந்தெடுத்து உங்களுடைய ரகசிய செய்தியை எழுதுவதற்கு உங்கள் மேஜையின் மேல் வைக்கவும். ஒரு பெயிண்ட் பிரஷ் எடுத்து எலுமிச்சை சாறு மற்றும் நீர் கலவையை தொடவும். இங்கே நீங்கள் பஞ்சு அல்லது பட்ஸை பயன்படுத்தலாம்.

4.பிரஷைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் செய்தியை காகிதத்தில் எழுதி உலர விடுங்கள். எலுமிச்சை சாறு காய்ந்ததும் நீங்கள் எழுதிய செய்தியை முழுமையாகப் பார்க்க முடியாது. எனவே, காகிதத்தை சரியாக உலர வைக்க வேண்டும்.

5. எரியும் மெழுகுவர்த்தியின் மீது காகிதத்தை கொண்டு வாருங்கள். காகிதத்தில் உள்ள செய்தி தெரியும் வரை சிறிது நேரம் காத்திருங்கள்.

எலுமிச்சை சாறு கண்ணுக்கு தெரியாத மை பரிசோதனை - முடிவுகள்

குறிப்பு: காகிதத்தை எரியும் மெழுகுவர்த்தியில் காட்டும் பொழுது போதிய இடைவெளி விடவும்.இது நெருப்பு பற்றிக்கொள்வதை தவிர்க்கும்.

முறை -2: உப்பைப் பயன்படுத்தி கண்ணுக்கு தெரியாத மை தயாரித்தல்

1.ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து சிறிது அளவு உப்பு சேர்க்கவும். உப்பு முழுவதுமாக நீரில் கரையும் அளவிற்க்கு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றவும். இந்த உப்பு கரைசலை கண்ணுக்கு தெரியாத மை போல பயன்படுத்தலாம்.

உப்பு நீர் கண்ணுக்கு தெரியாத மை பரிசோதனை

2.உப்பு நீரை பிருஷ்ஷால் தொட்டு காகிதத்தில் எழுத தொடங்குங்கள்.

செய்தியைப் பெற காகிதத்தை சூடாக்கவும் - கண்ணுக்கு தெரியாத மை பரிசோதனை

3.நீங்கள் எழுதியது சரியாக தெரிகிறதா என்று உறுதி படுத்திக்கொள்ளுங்கள்.

கண்ணுக்கு தெரியாத மை அறிவியல் திட்டம்

பரிந்துரைக்கப்பட்டவை: உப்புடன் அற்புதமான அறிவியல் சோதனைகளை ஆராயுங்கள்

குழந்தைகளுக்கான கண்ணுக்கு தெரியாத மை அறிவியல் திட்டம்

கண்ணுக்கு தெரியாத மையில் உள்ள அறிவியல்

எலுமிச்சை சாற்றில் நிறைய கார்பன் சேர்மங்கல் உள்ளன. இது ஒரு கரிமப் பொருள் என்பதால், இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் வெளிப்படுத்துகிறது.

எலுமிச்சை சாற்றில் உள்ள இந்த கார்பன் கலவைகள் அறை வெப்பநிலையில் நிறமற்றவை.

நாம் காகிதத்தை மெழுகுவர்தியில் காட்டும் பொழுது அதில் இருக்கும் கார்பன் கலவைகள் உடைந்து கார்பனை வெளியிடுகின்றன.

கார்பன் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனுடன் தொடர்பு கொள்ளும்போது – ஆக்சிஜனேற்றம் ஏற்படுகிறது. இதனால் காகிதத்தில் உள்ள எழுத்துக்கள் அடர் பழுப்பு நிறத்தில் நமக்கு தெரிகிறது. நீடித்த ஆக்ஸிஜனேற்றம் அதிக கார்பன்களைக் குறிக்கும் கருப்பு நிறத்தை உருவாக்கக்கூடும்.

எலுமிச்சை சாறு மற்றும் நீர் கலவையைப் பயன்படுத்திய காகிதத்தில் உள்ள உங்கள் எழுத்துக்கள் மெழுகுவர்த்தியின் அனலில் காட்டும் பொழுது பழுப்பு நிறமாக மாறும்.

காகிதத்தில் எழுதப்பட்ட எழுத்துக்களை கண்ணுக்கு தெரியாததாக மாற்ற, ஒரு சில நீர் சொட்டுகளை எலுமிச்சை சாறுடன் கலந்து உபயோக்கிறோம்.

எலுமிச்சை சாற்றினால் காகிதத்தில் எழுதினால், அது முழுவதுமாக உலர்ந்த பிறகு முற்றிலும் மறைந்துவிடும், இது காகிதத்தில் எதுவும் எழுதப்படவில்லை என்ற தோற்றத்தை அளிக்கிறது.

ஆனால் நீங்கள் காகிதத்தை வெப்ப நிலைக்கு கொண்டுவரும் பொழுது ஆக்ஸிஜனேற்றப்பட்டு பழுப்பு வண்ண எழுத்துக்களாக தோன்றும். ஆக்ஸிஜனேற்றம் என்பது கார்பன் அணுக்களை காற்றோடு இணைத்து பழுப்பு நிறமாக மாற்றும் செயல்முறையாகும்.

இன்னும் சில யோசனைகள் .

  1. பால், தேன், ஒயின், ஆரஞ்சு சாறு மற்றும் வெங்காய சாறு போன்ற பிற பொருட்களைப் பயன்படுத்தி கண்ணுக்கு தெரியாத மை உருவாக்க முயற்சிக்கலாம்.
  2. கருப்பு ஒளியில் ஒளிரும் பிற இரசாயன பொருட்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன